“எந்நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்!”-பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

Published by
Surya

இந்தியாவில் அக். 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கில் திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளடவைகள் மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது.

அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ளார். அந்த வழிகாட்டு நெறிமுறைகளில்,

  • பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்றால் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கபடுவார்கள்.
  • தங்களுக்குத் தேவையெனில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.
  • பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள், பள்ளி உபகரணங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் எந்நேரமும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.
  • அதேபோல் தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.
  • பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த தகவல் பதாகைகள், பேனர்களை கட்டாயமாக வைக்க வேண்டும்.
  • பள்ளிகளில் அவசரகால உதவிக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
  • பள்ளியில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்கும் வகையில், சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு வழங்க வேண்டும்.
  • பள்ளியில் மாணவர்கள் உட்பட யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி பின்பற்ற வேண்டும்.
Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago