ஹத்ராஸ் வன்கொடுமை: காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ்!

Published by
Surya

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த பெண்ணை தாக்கியத்தில் அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது.

இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரையும் அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

மேலும், வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய குற்றவியல் சட்டப்படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் குறித்த அடையாளங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் புகைப்படத்தை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தற்கு தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட அந்த ட்விட்டர் பதிவை உடனடியாக நீக்குமாறும் அவர்களுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

23 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

3 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago