வருகின்ற கல்வியாண்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட்டுகள் வாங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த டேப்லெட்டுகள் வாங்க மொத்தம் ரூ.620 கோடி செலவிடப்படும் என்றும் இதற்கான டெண்டர்கள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை வாங்க முடியாதவர்களுக்கு டிஜிட்டல் கல்வியில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் டேப்லெட்டில் டிஜிட்டல் மெட்டீரியல், இ-புத்தகங்கள், பல்வேறு வகையான தேர்வு வீடியோக்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வகுப்பு வாரியான பாடத்திட்டம் தொடர்பான இருக்கும் என்றும் இந்த திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் கன்வர்பால் கூறியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…