பிரதமர் மோடி கூறிய விளக்கேற்றும் நடைமுறை, ஏற்கனவே இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டதா?

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு

இந்திய அரசு கொரோனாவை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி வரும் ஞாயிறு இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்கள் விளக்கை எரிய விட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அகல் விளக்கேற்றும் நடைமுறை  இத்தாலியில் உள்ள மக்களை உற்சாகப்படுத்த, அந்நாட்டு அரசு கடைபிடித்த ஒன்று என கூறப்படுகிறது. அங்குள்ள மக்களை இத்தாலி அரசு வீட்டின் பால்கனியில் நின்று மெழுகுவர்த்தி ஏற்றுங்கள் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.