கொரோனாவால் இத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனரா! தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தகவல்!

Published by
Rebekal

இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து மே 30-ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

மேலும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மே 31-ஆம் தேதிக்குள் இது குறித்து முறையான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் இதுவரை தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 1,742 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 9,346 குழந்தைகளின் பெற்றோரை இழந்துள்ளதாகவும், அதில் 1742 குழந்தைகள் தாய் தந்தை இருவருமே இறந்துள்ளதாகவும், 140 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், மேலும் 7,464 குழந்தைகள் தாய் தந்தை யாரேனும் ஒருவரை இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இதுவரை 16 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகவும், 143 குழந்தைகள் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

15 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

15 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

16 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

17 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

17 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

19 hours ago