பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வலம் வந்து சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நாட்டை காப்பாற்றும் பணியான இராணுவத்திலும் சேர்ந்து சாதித்து உள்ளனர். இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ராணுவத்தில் பணியாற்றுகின்ற பெண் அதிகாரிகள் 1 4 ஆண்டிற்கு மேல் பணியை தொடர்ந்தால் அவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் இராணுவத்தில் உள்ள பெண்களுக்கு கமாண்டர் பிறப்பு வழங்க வேண்டும் என்று ஆணை விடுத்துள்ளது.
அது மட்டுமின்றி, ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடின்றி பெண்களை சமமாக நடத்தவும், ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் அமைக்கக்கோரி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெண்களை இராணுவத்தில் நியமனம் செய்வதையும் நிரந்தரமாக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு அளித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சிறப்புமிக்கது என குறிப்பட்டுள்ளார். ராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர கமிஷன் குறித்து பிரதமர் மோடி 2018ல் தமது சுதந்திர உரையின் போதே தெரிவித்ததாகவும், அதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…