கலவரத்திலும் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்திற்கு இந்து நண்பர்கள் செய்த மகத்தான காரியம்!வியந்து பார்த்த மக்கள்!

Published by
Sulai
  • குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்ட கலவரத்தில் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்திற்கு இந்து நண்பர்கள் செய்த மகத்தான காரியம்.
  • அங்கு நடந்த காட்சியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்துள்ளன. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் உத்திரப்பிரதேசத்த்தில் 18 -க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்த்தில் உள்ள கான்பூரின் பாகர்கஞ் பகுதியை சேர்ந்தவர் ஷுனத் ஆவார்.இவருக்கு கடந்த 21-ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.திருமணம் நடக்க இருந்த நாளன்று அப்பகுதியில் குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டிருந்தது.

அப்போது அப்பகுதியில் பதட்டமான சூழலே நிலவி வந்தது.இந்நிலையில் ஷுனத்தின் குடும்ப பாரம்பரிய படி மாப்பிளை ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு வருவது வழக்கம்.ஆனால் கலவரம் நடைபெறும் இடத்தில் ஒரு கிலோமீட்டர் எப்படி ஊர்வலமாக வரமுடியும் என்று பலர் கூறியுள்ளனர்.

இந்நிலையில் திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக அப்பகுதியில் நிறைய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்துள்னர்.

இந்த சூழ்நிலையை அறிந்த ஷுனத்தின் உறவினர் பக்கத்து வீட்டு நபரான விமல் ,சபாடியா என்பவர்கள் உதவி செய்ய முடிவெடுத்துள்ளனர்.சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷுனத்தை தனது சகோதரியாக ,விமல் கருதி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது தங்கையின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் எனக்கூறி விமல், அவரின் நண்பர்களான சோம்நாத் திவாரி ,நீராஜ் திவாரி ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். அவர்களும் உதவி செய்ய முடிவெடுத்து நண்பர்களை வரவழைத்துள்ளனர்.

அப்போது சுமார் 50 பேர் திரண்டுள்ளனர்.பின்னர் மணமகன் ஊர்வலம் நடக்க இருந்த இடத்திற்கு சென்ற அவர்கள் ,மணமகன் வரும் வழியே மனித சங்கிலி போன்று கைகளை இணைத்து பாதுகாப்பு கொடுத்ததோடு மண்டபம் வரை அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமியரின் திருமணத்தில் மணமகனின் பாதுகாப்பிற்கு 50-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கைகோர்த்து நின்றதை கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

25 minutes ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

4 hours ago