அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டரைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் கூறும்போது “அப்பாச்சி” ரக ஹெலிகாப்டருக்கு இணையான புதிய ஹெலிகாப்டரை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
அந்த ஹெலிகாப்டருக்கான வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. முன்மாதிரியாக ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பதற்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறினார். மத்திய அரசு இந்த ஆண்டு ஒப்புதல் கொடுத்தால் வருகின்ற 2027-ஆம் ஆண்டுக்குள் முதல் ஹெலிகாப்டர் தயாராகிவிடும் என கூறினார்.
மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்காது என ஆர்.மாதவன் தெரிவித்தார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…