இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியா ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹாட்ரிக் கோலை வந்தனா அடித்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் பெண் இந்திய வீராங்கனை வந்தனா தான்.
எனவே, வந்தனாவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கி கவுரவித்து இருந்தார். மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் மகள் வந்தனா டோக்கியோவில் நடந்த மகளிர் ஹாக்கி போட்டியில் மறக்க முடியாத பங்களிப்பு செய்தவர் எனவும், வந்தனாவை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் எனவும் கூறியிருந்தார்.
தற்பொழுதும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக வந்தனா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். வந்தனாவின் சாதனைகளை போற்றும் விதமாகவும், சாதியவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும் உத்தரகாண்ட் அரசு வந்தனாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமித்து கௌரவித்துள்ளது.
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…