பீகாரில் மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் மூளை காய்ச்சலால் காரணமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
எனவே நேற்று முன்தினம் இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருந்தது.மேலும் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
பின்னர் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது .அப்போது, பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இந்திய அணியின் ரன் என்ன என்றும் விக்கெட் என்ன என்றும் அவரது உதவியாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது உதவியாளர் இந்தியா 4 விக்கெட்கள் 89 ரன்கள் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே இருந்துகொண்டு, குழந்தைகள் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு கூட்டத்தில் அமர்ந்து இந்திய அணியின் ரன் கேட்ட அமைச்சரின் இந்த செயல் பலரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…