நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். பின்னர் ராகுல் காந்தியின் இந்த செயல் பல தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி (Hug day) தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு காங்கிரஸ் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தின வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில், கட்டிப் பிடி தினத்தன்று பா.ஜ.கவுக்கு நாங்கள் ஒரு மெசஜ் வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர். மேலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் கோழை என்றும், அன்பை வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற காந்தியின் விளக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது, வெறுப்பை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…