இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவின் ஆபத்துகளை பற்றி தனது கர்ப்பிணி மனைவி பேசும் வீடியோவை ரவிஷ் சாவ்லா பதிவேற்றியுள்ளார்.
மருத்துவர் டிம்பிள் அரோரா 7 மாத கர்ப்பிணி பெண் ஆவார். இவர் ஏப்ரல் 11-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது இயலாமையிலும் ஏப்ரல் 17-ஆம் தேதியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘கொரோனாவை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மோசமான அறிகுறிகள் உள்ளதால் என்னால் பேச முடியவில்லை. உங்கள் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் மக்களுடன் தொடர்பு கொள்ளும்போது தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த அறிகுறிகள் யாருக்கும் வருவதையும் நான் விரும்பவில்லை. தயவுசெய்து பொறுப்பற்றவராக இருக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளனர். நான் எப்போதும் வேலை செய்து கொண்டு இருந்தேன். நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். ஆனால், தற்போது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை அப்பெண்ணின் கணவர் ரவிஷ் சாவ்லா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் வெளியிட்டு, ஏப்ரல்-26 அன்று அவள் இறந்து விட்டாள். பிறக்காத குழந்தையையும் நான் இழந்து விட்டேன். இவ்வளவு துன்பத்தின் போது கூட, அவள் இந்த வீடியோவை வெளியிட்டதற்கு காரணம், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான்.’ என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் தனது தாயை கேட்கும் போது ஒவ்வொரு முறையும், எனது இதயம் உடைக்கப்படுகிறது. இந்த இறப்பை குறித்து எனது மகனுக்கு புரிய வைப்பதற்கு எனது மகனுடைய வயது போன போதுமானதாக இல்லை. அவள் கர்ப்ப காலத்தில் வெளியேறும் போது இரண்டு அல்லது மூன்று முக கவசங்கள் மற்றும் சில நேரங்களில் பிபிஇ கிட் கூட அணிந்து கொண்டு தான் வெளியே செல்லுவார் என தெரிவித்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…