வெடித்த ரேப் இன் இந்தியா விவகாரம் – என்னால் மன்னிப்பு கேட்க முடியாது -ராகுல் திட்டவட்டம்

Published by
Venu
  • ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று கூறிய விவகாரத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.இதன் பின்பு குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் சுட்டு கொன்றனர்.இதன் பின்பும்  நாடு  முழவதும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகிறது.

இந்த நிலையில் பாலியல் வன்முறை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த கருத்து ஒன்றிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தலையொட்டி பரப்புரை நடைபெற்று வருகிறது.இந்த பரப்புரையின் போது காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பேசினார்.அவர் பேசுகையில்,நாட்டின் பிரதமரான மோடி எங்கு போனாலும் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து பேசி வருகிறார்,ஆனால் நாட்டில் பல இடங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறி ரேப் இன் இந்தியாவாக மாறி வருகிறது என்று தெரிவித்தார்.மேலும் உ. பி.யில்  பாஜக எம்.எல்.ஏ.,வால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்பு அந்த பெண் வாகன விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி பிரதமர் ஒரு வார்த்தைகூட கூற வில்லை என்று கூறினார்.இவர் இவ்வாறு கூறியது மக்களவையில் எதிரொலித்தது.இன்று கூடிய மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் பின்னர் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறுகையில்,   இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.நாட்டில் தற்போது தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது. இந்தப் பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.தினமும் செய்தித்தாளை படித்தால்  இந்தியாவில் நடக்கும் பாலியல்  குற்றங்கள் பற்றிதான் வாசிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago