நாளை சென்னையில் இருப்பேன்.. தமிழில் ட்வீட் செய்த பிரதமர்..!

I will be in Chennai tomorrow to attend an event to launch various projects.

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். அவரது, வருகையை தொடர்ந்து,நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

unknown node

அதில், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.