நான் நிரபராதி என நிரூபித்து மீண்டும் அமைச்சராகுவேன் – கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா..!

ஒப்பந்தக்காரர் சந்தோஷ் பாட்டில் என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்ப மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஸ்வரப்பா இன்று மாலை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக தொண்டர்களை சந்தித்து பேசிய அவர், என் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நான் அமைச்சராக தொடர்ந்தால் அது என்னை பாதிக்கும் என்பதால் தான் ராஜினாமா செய்கிறேன். நான் நிரபராதி என்பதை நிரூபித்து, மீண்டும் அமைச்சராகுவேன் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025