சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன்.
இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஹுக்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். அமித்ஷாவும், நரேந்திர மோடியும் நாடு முழுவதும் பொய்யையும் வெறுப்பையும் தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி எதிர் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன். பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என்றும், வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும் என்றும், பாஜக மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நாட்டிலிருந்து நிச்சயமாக தூக்கி எறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…