மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மும்பையில் 50 வயதுக்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் உயிரிழக்கிறார்கள் என்று அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மும்பையில் 50 வயதிற்கு மேற்பட்ட, ஒவ்வொரு 100 கொரோனா நோயாளிகளிலும் 10 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளார்கள் என்று மும்பை மாநகராட்சி (BMC) தெரிவித்துள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.4% என்றும் இது மும்பையின் சராசரியை விட 5.4% ஆக உள்ளது என்று கூறியுள்ளது. இது 1,32,221 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 6,419 இறப்புகளின் வயது வாரியாக புள்ளிவிவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டவர்களில், 80-89 வயதுக்குட்பட்டவர்களில் மிக அதிகமான இறப்பு விகிதம் 21.2% ஆகவும், கொரோனா பாதித்த 3,131 பேரில் 664 பேர் இறந்துள்ளனர்.

70-79 வயதுக்குட்பட்ட, 9,463 கொரோனா நோயாளிகளில் 1,496 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 15.81% ஆக உள்ளது. 60-69 வயதுடையவர்களின் இறப்பு விகிதம் அதிகம் பதிவாகியுள்ளது. 18,454 நோயாளிகளில் இருந்து 2,122 பேர் இறந்துள்ளனர். இதன் இறப்பு விகிதம் 11.49% ஆகும். 9 வயதுக்கு குறைவான குழந்தைகளில் இறப்பு விகிதம் 0.49% மிகக் குறைவவும் என்றும் 2,439 குழந்தைகளின் 12 பேர் இறந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால் அவர்களின் நோயெதிர்ப்பு திறன் தோல்வியடைகிறது. மூத்த குடிமக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற நோயுற்ற தன்மைகளும் அதிகம் இருப்பதால் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதுவரை, பி.எம்.சி 874,275 மூத்த குடிமக்களை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,097 பேர் ஆக்ஸிஜன் செறிவு 95 க்கும் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இவர்களில் 5,036 மூத்த குடிமக்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழ்கின்றனர். இதனிடையே, மும்பையில் நேற்று புதிதாக 1,350 கொரோனா உறுதியான நிலையில், 30 பேர் இறந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 140,888 ஆகவும், தற்போது 19,463 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மும்பைக்கான இறப்பு விகிதம் 5.3%, குணமடைந்தவர்களின் விகிதம் 80% ஆக இருக்கிறது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

13 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

13 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago