அடுத்த மூன்று வாரங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்று சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
இந்தியாவில் அடுத்த 3 வாரங்கள் நோய்த்தொற்று கொரோனா பரவுவதைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார். கொரோனா நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க மக்கள் அரசு வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து டாக்டர் மிஸ்ரா கூறுகையில், ஆக்ஸிஜன் சிலிண்டர், தடுப்பூசி பற்றாக்குறை நிலைமை தொடர்ந்தால் பேரழிவு தரும் நிலையில்ஏற்படும். இத்தாலியில் இந்த வகையான நிலைமையை நாங்கள் பார்த்தோம். அங்கு சிகிச்சை மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் பலர் உயிரிழந்தனர்என்று அவர் கூறினார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து பேசிய டாக்டர் மிஸ்ரா, இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானது என்று கூறினார். கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் முகக்கவசங்களை அணியாமல் கொரோனா முற்றிலுமாக போய்விட்டது என்று நினைப்பதே நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதற்கான காரணம் என்று அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…