அடுத்த மூன்று வாரங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்று சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
இந்தியாவில் அடுத்த 3 வாரங்கள் நோய்த்தொற்று கொரோனா பரவுவதைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார். கொரோனா நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க மக்கள் அரசு வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து டாக்டர் மிஸ்ரா கூறுகையில், ஆக்ஸிஜன் சிலிண்டர், தடுப்பூசி பற்றாக்குறை நிலைமை தொடர்ந்தால் பேரழிவு தரும் நிலையில்ஏற்படும். இத்தாலியில் இந்த வகையான நிலைமையை நாங்கள் பார்த்தோம். அங்கு சிகிச்சை மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் பலர் உயிரிழந்தனர்என்று அவர் கூறினார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து பேசிய டாக்டர் மிஸ்ரா, இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானது என்று கூறினார். கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் முகக்கவசங்களை அணியாமல் கொரோனா முற்றிலுமாக போய்விட்டது என்று நினைப்பதே நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதற்கான காரணம் என்று அவர் கூறினார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…