Categories: இந்தியா

ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு கைப்பற்றிய இந்தியா.!

Published by
பால முருகன்

சென்னை : ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா கைபற்றியுள்ளது.

ஈரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை மேம்படுடைத்த இந்தியா 10 ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளதாக மத்திய நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று ஈரானுக்கு புறப்பட்டு சென்ற சர்பானந்தா சோனோவால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகத்தில் ஈரானின் சபஹர் துறைமுகத்துடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்வதற்கான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதனை தொடர்ந்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இந்த நிகழ்வு நடந்து இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார் ” ஈரானின் தெஹ்ரானில், சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹே மெஹர்தாத் பஸ்ர்பாஷ்  முன்னிலையில், சபஹர் துறைமுக செயல்பாடுகளுக்கான நீண்ட கால இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா மற்றும் ஈரான் உறவுகளை வரலாற்று தருணத்தை உருவாக்கும் விதத்தில் ரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு மேம்படுத்தி இயக்கும். பிரதமர் மோடி அவர்களின் இடைவிடாத முயற்சியால் நடைபெற்றுள்ளது.  இந்த ஒப்பந்தம் இரண்டு பெரிய நாடுகளுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய சரக்கு போக்குவரத்து மற்றும் கடல்சார் துறையில் இந்தியாவின் உறுதியான காலடி தடத்தை பதித்துள்ளது.

ஈரான், ஆப்கானிஸ்தான், யூரேசியா மற்றும் மத்திய ஆசிய குடியரசுகளுக்கு இந்தியாவிற்கு மாற்று வர்த்தக வழியை வழங்குவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்தும் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை இது உணர்த்துகிறது. சபாஹர் துறைமுகத்தின் இந்தியாவின் ஒப்பந்தம், உலகளவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்” எனவும் சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார். 

மேலும், இந்த 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனமான இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (ஐபிஜிஎல்) சபஹர் துறைமுகத்தில் சுமார் கிட்டத்தட்ட 120 மில்லியன் அமெரிக்க டாலரில்  முதலீடு செய்யவுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

24 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago