இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது.
கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. தற்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகளை இந்திய ராணுவம் நேபாள ராணுவத்திற்கு பரிசளித்துள்ளது.
ஏர் இந்திய விமானத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகளை இந்திய ராணுவ அதிகாரிகள் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நேபாள இராணுவத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் கூறியதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் தடுப்பூசிகள் நேபாள ராணுவத்திற்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ராணுவத்தினருக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா, நேபாளத்திற்கு மருந்துகள் மற்றும் சோதனைக் கருவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…