இந்தியாவில் ஆக்ஸ்போர்டு போன்ற பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, இந்திய பல்கலைகளில் பயின்றவர்கள் மைக்ரோ சாப்ஃட், கூகுள்,ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டுப் பல்கலைகளின் கிளைகள் இந்தியாவில் துவங்கப்பட்டால் மேலும் திறமைமிக்கவர்களை உருவாக்க முடியும்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகளில் படிக்கச் செல்கின்றனர். இதனால் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு செல்வதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இருப்பினும் வாஷிங்டன் பல்கலை, லண்டன் ஸ்கூல் ஆப் எகானாமிக்ஸ், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல்கலைகள் இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், எம்சிகில் பல்கலை, சிட்னி பல்கலை போன்றவை இந்தியாவில் கிளைகள் ஏற்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியாவிலும் பிரசித்தி பெற்ற பல்கலைகளின் கிளைகள் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கருத்து தற்போது தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…