ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேதுறையில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஒரு அரசு துறையாகும்.இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவையானது முடங்கியது.
தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் அத்துறையானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், புது இடங்களை நிரப்புவதை நிறுத்தி வைக்கவும் பொது மேலாளர்களுக்கு டைரக்டர் ஜெனரல் ஆனந்த் எஸ் காதி, கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ரயில்வே துறையில் வேலை ஆட்கள் குறைக்கப் படுகிறார்களா..? என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆட்கள் குறைப்பு இருக்காது. அதேவேளையில் ரயில்வே சுயவிவரத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ரயில்வே தற்போது 12,18,335 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அதன் வருமானத்தில் 65 சதவீதத்தை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்த செலவிடுகிறது. மேலும், ஊழியர்களின் செலவைக் குறைப்பதன் மூலமும், பல பணிகளைச் செய்வதன் மூலமும் செலவினங்களைக் கட்டுப்படுத்த மண்டலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யவும், எரிசக்தி நுகர்வு குறைக்கவும் மற்றும் நிர்வாக, பிற பகுதிகளில் செலவைக் குறைக்கவும் மண்டலங்களைக் கேட்டுக்கொண்டார்.
2018-ஆம் ஆண்டு முதல் ரயில்வே பாதுகாப்பு பிரிவில் 72,274 இடங்களும் மற்றும் பாதுகாப்பு அல்லாத பிரிவில் 68,366 இடங்களும் என மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1,40,640 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…