Categories: இந்தியா

நீட் தேர்வு மையங்களில் உள்ளாடை சோதனை… கடைசி நேரத்தில் ஆடைகளை மாற்றிய மாணவர்கள்…

Published by
Muthu Kumar

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க நீட் தேர்வு மையங்களில் நடந்த சோதனை குறித்த மாணவர்களின் புகார்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவப்படிப்புக்கான இளநிலை நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 4,000-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத்தேர்வில் கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதினர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தேர்வு எழுத வந்த மாணவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேசிய சோதனை நிறுவனம்(NTA) நடத்திய இந்த தேர்வில், விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாட்டால் கடைசி நிமிடத்தில் உடையில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது என சில மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்காளத்திலும், சில மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி திருப்பி அணியுமாறும் அல்லது பெற்றோருடன் உடைகளை மாற்றிக் கொள்ளும்படி கேட்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிகழ்வுகள் குறித்து சக மாணவர்களால் சமூக ஊடகங்களில் புகாரளிக்கப்பட்டன.

சில மாணவர்கள் தங்கள் பேண்ட்களில் பாக்கெட் இருந்ததால் வேறு உடை மாற்றுமாறு கூறியதால் அருகிலுள்ள கடைகளுக்கு அவசர அவசரமாக சென்றனர், மாணவிகள் ஜீன்ஸ் அணிந்து வந்ததால் பெற்றோர்களின் உடைகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறியதால், அவர்களும் உடைமாற்றும் அறை இல்லாமல் வேறு வழியின்றி பொது இடத்தில் மாற்றிக்கொண்டனர்.

இது தவிர பல மாணவிகள் தங்களது உள்ளாடையின் ப்ரா பட்டை முதற்கொண்டு சோதனை செய்யப்பட்ட விதம் மற்றும் உள்ளாடைகள் திறந்து காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது குறித்து புகார் கூறினர். ஒரு மருத்துவ குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் கூறும்போது, ஒரு மையத்தில் உள்ள பெண் மாணவிகள் தங்கள் குர்தாக்களை கழற்றி மாற்றி அணிய வைத்தது குறித்து அவர்களது மகள் கூறியதாக தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாணவர்கள் முக்கியமான தேர்வுக்கு செல்லும்போது தேர்வு மையத்தினர் இவ்வாறு அவர்களை நடத்தக்கூடாது, இது மனதளவில் மாணவர்களை பாதிக்கிறது என்று கூறினர்.

பல மாணவர்கள் தங்களது பேண்ட்களை மாற்றவேண்டியிருந்தது, மேலும் உள்ளாடைகளையும் திறந்து காட்டும்படி கூறப்பட்டதாக புகார் தெரிவித்தனர். மாணவியர்களுக்கு தங்களது உடைகளை திறந்தவெளியில் மாணவர்கள் இருக்கும் இடங்களில் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

15 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago