ஜூன் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை..!

Default Image

கொரோனா காரணமாக ஜூன் 30-ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 31 வரை சர்வதேச விமானங்களுக்கு தடை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து  மத்திய அரசு அனுமதித்துள்ள விமான போக்குவரத்து தவிர மற்ற சர்வதேச விமானங்களுக்கு  ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு சில விமானங்கள் மட்டும் மத்திய அரசின் அனுமதியுடன் இயங்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts