சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு..!

Published by
murugan

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை ஒரு மாதம் நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகள் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த நிலையில், Omicron மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, அரசு மீண்டும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச அனைத்து சரக்கு விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் 20-க்கும் நாடுகளில் பரவியுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு (WHO) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Omicron “ரிஸ்க்” நாடுகளின் தற்போதைய பட்டியலில் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பாவின் பிற நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடங்கும்.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago