இன்று மாலை 5 மணி வரை ஹரியானாவின் சில பகுதிகளில் இணைய சேவை ரத்து!

Published by
Rebekal

விவசாயிகள் போராட்டம் காரணமாக இன்று ஹரியானாவின் சில பகுதிகளில் மாலை 5 மணி வரை இணைய சேவைகள் ரத்து செய்யபடுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட  இரண்டு மாதங்களாக தொடரக்கூடிய இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விவசாயிகள் அவ்வப்போது பல்வேறு விதமான போராட்டங்களையும் கையிலெடுத்து வருகின்றனர். அகிம்சை நிலையில் நடந்து வந்த இந்த போராட்டம் தற்போது சில மோதல்களில் முடிவடைந்துள்ள நிலையில் ஹரியானா முழுவதும் பல இடங்களில் இணைய சேவைகளை ஹரியானா அரசு முடக்கி வைத்துள்ளது.

அதன்படி இன்று மாலை 5 மணி வரை அம்பாலா, யமுனநகர், குருக்ஷேத்ரா, கர்னல், கைதால், பானிபட், ஹிசார், ஜிந்த், ரோஹ்தக், பிவானி, சர்கி தாத்ரி, ஃபதேஹாபாத், ரேவாரி மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று இதே போல ஹரியானாவின் சில மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. குடியரசு தினத்தில் இருந்து மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் இணைய சேவை மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Rebekal

Recent Posts

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

35 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago