ராகுல் காந்தி-னு பெயர் வைத்தது தவறா? இளைஞருக்கு நேரிட்ட சிக்கல்!

Published by
லீனா

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி. இவருக்கு வயது 22. இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் தலைவரின் பெயரான ‘ராகுல் காந்தி’ என்ற பெயரை சூட்டியுள்ளார். இந்த பெயரால் அவருக்கு ஏற்படுகிற சிக்கல்களை குறித்து விவரித்து கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராகுல் காந்தி என்ற பெயரில் ஆதார் அட்டை வாங்கியுள்ளேன். மொபைல் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, அல்லது மற்ற பணிகளுக்காகவோ எனது ஆதார் அட்டை நகலை கொடுத்தால், என்னை போலி நபராக பார்க்கின்றனர். என் மீது சந்தேகத்துடனும் என்னை பார்க்கின்றனர். மேலும், தொலைபேசியில் என்னை நான் புதிய நபர்களிடம் அறிமுகம் செய்யும் போது, ‘ராகுல் காந்தி எப்போது இந்தூருக்கு வாசிக்க வந்தார்’ என கேட்கின்றனர்.

இவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்றால், இவரது தந்தை ராஜேஷ் மாளவியா இராணுவத்தில், சலவையாளராக பணியாற்றியுள்ளார். இவர் இந்த பணியை தொடர்ந்த போது, அங்குள்ள அதிகாரிகள் அவரை ‘காந்தி’ என அழைப்பதுண்டு.

நாட்கள் கடந்து போக, இந்த பெயரில் நாட்டம் கொண்ட ராஜேஷ், தனது பெயருடன் காந்தி என்ற பெயரை இணைத்துக் கொண்டார். அதன்பின், இவர் ராகுலை பள்ளிக்கு சேர்க்கும் போது, பள்ளியில் ராகுல் மாளவியா என பதிவு செய்வதற்கு பதிலாக ‘ராகுல் காந்தி’ என பதிவு செய்துள்ளார்.

ஆனால், ராகுல், தனது பள்ளி படிப்பை 5-ம் வகுப்புடன் இடைநிறுத்தம் செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது பெயரில் எனது குடும்ப பெயரான மாளவியா என மாற்றுவது குறித்து, தீவிரமாக யோசித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago