5 ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுப்பு.! இதுதான் ஜனநாயக அரசாங்கம் செயல்படும் முறை..? மம்தா பானர்ஜி.!

Published by
murugan

ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை அறிவித்தது. அது என்னவென்றால், LWP எனப்படும் leave without pay scheme திட்டத்தின் கீழ் சில ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என தெரிவித்தது.

(LWP ) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுபவர்களை பட்டியலிடும் பணியும் தொடங்கி உள்ளதாகவும்,  வேலைத்திறன், ஆரோக்கியம் மற்றும் இதற்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டவரா..? என்பது போன்ற பல்வேறு காரணங்கள் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும்என ஏர் இந்தியா கூறியது.

சில ஊழியர்களை ஆறு மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அது எதிர்காலத்தில் நடக்கும் மாற்றங்களை பொருத்து  ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்  என தெரிவித்தது.

ஏர் இந்தியா சில ஊழியர்களை ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்ப  செய்துள்ள முடிவிற்கு மமம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.  இந்நிலையில், இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மமம்தா பானர்ஜி,  மத்திய அரசு கொரோனா வைரஸ்  காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி பயன்படுத்திக் கொள்வதாகவும்,  சட்டங்களையும், விதிகளையும் மாற்றியமைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சில நேரங்களில், அவர்களுக்கு எதிராக எதுவும் சொல்லக்கூடாது என்றும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் நான் உணர்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு முக்கியமான காலத்தை நாம் கடந்து செல்லும்போது, எல்லோரும் நோயை எதிர்த்துப் போராடுகையில், மத்திய அரசும், பாஜகவும் எடுக்கும் முடிவிற்கு நான் வருந்துகிறேன்.

எந்தவொரு ஆலோசனையுமின்றி அவர்கள் ஏற்கனவே பல சட்டங்களைத் திருத்தியுள்ளனர், பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் தங்கள் சர்வாதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் அதைச் செய்கிறார்கள் என அவர்  கூறினார்.

மேலும், ஒரு ஜனநாயக அரசாங்கம் செயல்படும் முறை இதுதானா..? எல்லாம் தொலைந்துவிட்டது … எல்லோரும் பயப்படுகிறார்கள்,  வெட்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்..? என மமம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

11 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

43 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

45 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago