கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரங்களில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு இருங்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கேரளாவில் ஒரே நாளில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே, கேரளாவில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தேர்தல் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். மேலும், மக்கள் கொரோனா தொற்று அதிகரிக்கும் காலங்களில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் புதியதாக கேரளாவில் ஆக்சிஜன் ஆலை அமைக்கக் கூடிய பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். சந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வரக்கூடிய மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இரட்டை முக கவசம் அணியுமாறும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…