ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து இருந்தது.
இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர். ஆனால், இறுதிகட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே , ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து வருகிற நவம்பர் மாதம் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டாளர் சீனிவாசுலு ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி. சி-49, பி.எஸ்.எல்.வி. சி-50 ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…