புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 1.50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக பல இடங்களில் தங்கி வேலை பார்த்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம்பெயர தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்துவது தான் மத்திய அரசின் பொறுப்பாகும். ஆனால் தேவையான உதவி செய்யாமல், கொரோனா பரப்புவதாக மக்களை மத்திய அரசு குறை கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…