ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது வங்கி கணக்கு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வங்கி கணக்கு உருவாக்கும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை அமல்படுத்தியிருந்தார். இதன் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் வங்கி கணக்குகள் தொடங்கியதுடன், அவர்களுக்கு செல்ல வேண்டிய அரசு மானியங்களும் இந்த வங்கி கணக்கு வாயிலாக செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கி நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அவரது பதிவில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டம் ஏராளமான வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு அடித்தளமாக இருந்தது என்றும், இதன் மூலம் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருவதாகவும், குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் மக்களும் , பெண்களே இந்த திட்டம் மூலம் பயன்பெற்றதாகவும் கூறியுள்ளார். ஏராளமான மக்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றிய ஜன்தன் யோஜனா திட்டத்திற்கு நன்றி என்றும், இந்த திட்டத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…