ரயில்வே ஊழியரின் அந்த நல்ல மனசுக்கு பரிசாக கிடைத்த ஜாவா பைக்…!

Published by
Edison

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பரிசாக ஜாவா பைக்கை தருவதாக பிரபல பைக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்போது,அப்பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் சத்தமாக குரல் எழுப்பினார்.

அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே,குழந்தை விழுந்ததைப் பார்த்தவுடன் வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழந்தையை தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்துக்கு  தூக்கிவிட்டார்.ரயில் தன்மீது மோதவிருந்த சில நொடிகளில் தானும் உடனே  பிளாட்பாரத்தின் மேலே ஏறி தப்பித்துக் கொண்டார்.

மயூர் செல்கே, குழந்தையைக் காப்பாற்றிய சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இதனையடுத்து,மயூர் தைரியமுடன் செயல்பட்ட விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,மயூர் செல்கே குழந்தையைக் காப்பாற்றும் வீடியோவை சமூக  ஊடகங்களில் பார்த்த ஜாவா பைக் நிறுவனத்தின் இயக்குநர் தாரிஜா,ஒரு புதிய ஜாவா பைக்கினை மயூர் செல்கேவுக்கு பரிசாக தருவதாக அறிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

32 minutes ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

41 minutes ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

3 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

4 hours ago