கடந்த பிப்ரவரி மாதம் பிப்ரவரி 24-ம் தேதி அன்று வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும் , சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும் இடையே பயங்கர கலவரம் நடைபெற்றது. இந்த கலவரம் ஜாஃப்ராபாத், சிவ் விஹார், சீலம்பூர், ஷாகுர் பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். 108 காவல்துறையினர் காயமடைந்தனர், இரண்டு பேர்உயிரிழந்தனர். இந்த கலவரம் தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திடம் செப்டம்பர் 2 ம் தேதி டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு விசாரித்தது.
இதைத்தொடர்ந்து, அவரிடம் 11 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவு நேற்று இரவு கைது செய்தது. டெல்லி போலீசார் காலித்தை சிறப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித்தை கைது செய்து உள்ளனர்.
இதுவரை 751 வழக்குகளில் 1,575 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளில் 250 க்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…