லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழிகாட்டுதல்களை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டிற்கு செல்லும் இந்தியர்கள் ஏமாற்றப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போலி ஏஜெண்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் இதன் காரணமாக பல மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எனவே தான் இந்த அறிவுரையை அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “கம்போடியா அல்லது தெற்காசிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்லும் அனைத்து இந்தியர்களும் கவனமாக செல்லுங்கள் போலி ஏஜெண்டுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவிலும் போலி ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். லாவோஸ், கம்போடியா நாட்டில் உள்ள ஏஜெண்டுகள் இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகளுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை கவர்ந்திழுக்கிறார்கள். கம்போடியாவில் வேலைக்குச் செல்லும் எவரும், இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே செல்ல செய்ய வேண்டும்.
வேலை தேடுவோர் இந்திய தூதரகமான புனோம் பென்னை cons.phnompenh@mea.gov.in மற்றும் yisa.phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகலாம். லாவோஸ் நாட்டில் டிஜிட்டல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து லாவோஸுக்கு வந்த பிறகு கூலித் தொழிலாளிகளாக வேலை செய்ய வைக்கிறார்கள். மேலும் சட்டவிரோத வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
துபாய், பாங்காக், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற பல்வேறு இடங்களில் நடத்தப்படும் ஆட்சேர்ப்பு எளிய நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பை உறுதியளிக்கிறார்கள். தாய்லாந்து அல்லது லாவோஸுக்கு வருகை தரும் விசா வேலைவாய்ப்பை அனுமதிக்காது என்றும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வரும் இந்தியர்களுக்கு லாவோ அதிகாரிகள் பணி அனுமதி வழங்குவதில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. எனவே, இந்திய குடிமக்கள் இதுபோன்ற மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் லாவோஸில் எந்தவொரு வேலை வாய்ப்பையும் பெறுவதற்கு முன்பு தீவிர எச்சரிக்கையுடன் பணியமர்த்தும் ஏஜெண்டுள் மற்றும் நிறுவனத்தையும் சரிபார்க்கவும்” என தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…