செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் .!

Published by
Dinasuvadu desk
  • டெல்லியில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
  • இதுவரை இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.வன்முறை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் வன்முறை குறித்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் இடையில் செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த இரண்டு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 2 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையெடுத்து இந்த வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் , முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago