போட்டியின்றி பாஜக தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு.!

Published by
murugan
  • இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பாஜக தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
  • வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் ஜே.பி நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது கட்சித் தலைவராக பதவி வகித்த ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து 2014 -ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பாஜகவிற்கு அமித்ஷா தலைவரானார்.

பின்னர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது 2014-ம் ஆண்டை விட கூடுதல் இடங்களை பிடித்து மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.கட்சிக்கு வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித்ஷா உள்துறை அமைச்சரானார்.

ஆனாலும் கட்சிப்பதவியில் தொடர்ந்தார், அமித்ஷாவிற்கு உதவியாக செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதனால் அந்த பதவிக்கு மோடியின் முந்தைய அரசின் சுகாதார துறை மந்திரி இருந்த ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஜே.பி நட்டா செயல் தலைவர் தலைவராகப் பொறுப்பேற்றார் .இந்நிலையில் பாஜக தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இது தொடர்ந்து பாஜகவில் புதிய தலைவராக ஜே.பி நட்டாவின் பெயரை மோடி , மத்திய அமைச்சர்கள் , பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் , துணை முதலமைச்சர்கள் முன் மொழிந்தனர். இதனால் வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் ஜே.பி நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Published by
murugan

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

56 minutes ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

3 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

6 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

6 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

7 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

10 hours ago