டெல்லி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி, தற்போது நாட்டில் பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன.
இந்த வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஜூன் 7ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கின்றனர். அந்த கூட்டத்தில், நரேந்திர மோடி மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, சனிக்கிழமை (ஜூன் 8) இந்த பதவியேற்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மீண்டும் பதவியேற்கும் வகையில், மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.
இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின், மீண்டும் பிரதமராக பதவியேற்க மோடி உரிமை கோரவுள்ளார். திரௌபதி முர்மு ஒப்புதல் கிடைத்தவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…