கொரோனா காரணமாக உதரிபாகங்கள் வாங்குவது தாமதமாகியுள்ளதால் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டதிக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு, சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விண்வெளியில் தாழ்வான நிலையிலிருந்து பூமியை 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் ககன்யான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ககன்யான் விண்கலத்தில் பயன்படுத்தப்பட உள்ள திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது என கூறப்பட்டது. அதுவும், தமிழகத்தில் நெல்லையிலுள்ள காவல்கிணறு மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக 4 வீரர்களை இஸ்ரோ தேர்வு செய்தது. தற்போது அவர்கள் 4 பேரும் ரஷியாவில் பயிற்சியில் உள்ளனர். முதற்கட்ட சோதனையாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை பூமிக்கு அனுப்பி சோதனை நடத்தப்படும் என்றும் 2-வது ஆளில்லா ராக்கெட்டை 2022-2023-ம் ஆண்டுக்குள் அனுப்பி சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
இந்த நிலையில், கொரோனாவால் உதரிபாகங்கள் வாங்குவது தாமதமாகியுள்ளதால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது இது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனாவால் பல மாநிலங்கள், நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காரணமாக வன்பொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் வடிவமைப்பு, ஆவணங்கள் இஸ்ரோவால் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தொழில்துறையிடம் இருந்து ககன்யானுக்கான வன்பொருள் (உதரிபாகங்கள்) வாங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…