#BigBreaking:கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா..!

Published by
Edison

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகா முதல்வராக உள்ள 78 வயதான எடியூரப்பாவுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உள்ளது.காரணம்,அவர் தனது மகன் விஜயேந்திராவுவை அடுத்த அரசியல் வாரிசாக,துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வர முயல்வதாகவும்,கட்சி நிர்வாகிகளை சரிவர கவனித்துக் கொள்வதில்லை எனவும்,மேலும் முக்கியமான ஆலோசனைகளில் கட்சி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

எதிர்ப்பு:

மேலும்,கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்.எல்.ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சித்தனர்.மேலும்,எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.ஏனெனில்,கட்சி விதிகளின்படி,75 வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக,எடியூரப்பாவை மாற்றுவது என பாஜக மேலிடம் தீர்மானித்ததாக தகவல் வெளியானது.

பிரதமரை சந்திப்பு:

அதற்கேற்ப,கடந்த வாரம்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை நேரில் சந்தித்தார்.இதனால்,அவர் பதவி விலகுவது உறுதியானது.

இதனால்,அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர்.அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்தார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”பாஜகவின் உண்மையாக தொண்டனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இதனால் கட்சி தொண்டர்கள் யாரும் மரியாதைக் குறைவான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”, என்று தெரிவித்தார்.

அடுத்த முதல்வர் யார்?:

இதனிடையே,முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபட்டன.

ராஜினமா:

இந்நிலையில்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”கர்நாடகாவில் எனது தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைகிறது.இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன்.மேலும்,இன்று மதியம் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன். மேலும்,அடுத்த தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியை பிடிக்க கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.எனவே, அனைவரும் எனக்கு ஒத்துழைப்ப அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago