காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவாதம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘ 370 சட்டப்பிரிவு மற்றும் 35ஏ மூலம் காஷ்மீரில் ஜனநாயகம் முழுமையாக நிலைநாட்டப்படவில்லை, மேலும் அங்கு வாழும் மக்களுக்கு வளர்ச்சியும் ஏற்படவில்லை. இந்த சிறப்பு அந்தஸ்தை சில அரசியல்வாதிகளும், பணக்கார குடும்பங்களும் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.’ என்றும்,
மேலும், ‘ தமிழகம் , ஆந்திரா போன்ற மாநிலங்கள் பிரிவு 370 இல்லாமலும், மொழி மற்றும் கலாச்சாரத்தை பேணி பாதுகாத்து வருகின்றனர்.’ என தெரிவித்தார். மேலும் ‘காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தாற்காலிகமானது தான் என்று தெரிவித்தார்.காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.’ என்றும் தெரிவித்தார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…