காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளும் – ட்ரம்ப் அதிரடி கருத்து!

Published by
மணிகண்டன்

பிரான்சில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சிறப்பு அழைப்பு வந்ததை அடுத்து முதன்முறையாக இந்தியா சார்பில் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு நிகழ்ந்தது.

அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளும்.’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும்,  அதே போல, ‘காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து கவலை கொள்ளமாட்டோம். இந்த விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயானது.’ என பிரதமர் மோடியும் அதிரடியாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதற்கு முன்னர்,  ‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது.’ என அதிபர் டிரம்ப் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தனது கருத்துக்களை  மாற்றிக் கொண்டுள்ளார். பிரதமர் மோடி, ‘இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்’ என கூறினார்.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும்  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு கலந்து கொண்டனர். இதில் இருநாடுகளுக்கு இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

10 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

35 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

59 minutes ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்…  சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…

2 hours ago

1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago