Categories: இந்தியா

கேரள குண்டுவெடிப்பு : உயிரிழப்பு 3ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி எனும் ஊரில் நேற்று வழக்கம் போல கிருஸ்தவ மத வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. 2000க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது காலை 9.40 மணி அளவில் தொடர்ந்து 3 குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண்மணி உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தோர்கள், எர்ணாகுளம் மற்றும் களமசேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோர்களில் 7 பேர் பலத்த தீ காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யார் இந்த டொமினிக் மார்ட்டின்? தீவிர விசாரணையில் கேரள போலீஸ்! முழு விவரம்…

இந்த விபத்தில் நேற்று இரவு ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்பை தொடர்ந்து கேரள குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில், கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர், நான் தான் வெடிகுண்டு வைத்தேன் என கூறி திருச்சூர், கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  வெடிகுண்டு விபத்தை பற்றி முழு விவரம் அறிய 20 பேர் கொண்ட விசாரணை குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. மத்திய அரசு சார்பில் என்ஐஏ அதிகாரிகள் இந்த வெடிகுண்டு விபத்தின் பின்புலம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது இருந்தார். அதன் படி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago