கேரளாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு.! பொதுமக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்.!

Published by
மணிகண்டன்

கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரையில் 493 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கேரளாவில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது திடீரென 26ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 சுகாதார ஊழியர்கள் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோரும் அடக்கம்.மேலும், வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 14 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

இன்று மட்டுமே கொரோனா சிகிச்சை முடிந்து 3 பேர் குணமடைந்தனர். இதுவரை 493 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கேரளாவில் தற்போதைய ஹாட்ஸ்பாட்களின் எண்ணிக்கையானது 15ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 560 பேரில் 64 பேர் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கேரளாவில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக பொதுமக்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘உலகில் பல்வேறு பகுதிகளில் 124 மலையாளிகள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துக்கத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். எனவும்,

இனி பொது மக்கள் தங்கள் உணவு பழக்க வளாகத்தில் மாற்றம் கண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும். மேலும், வெளியிடங்களுக்கு செல்கையில் முகமூடிகளை அணிய வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். ஹோட்டல்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்து வாங்கிகொள்ள வேண்டும். இதன் பின்னர் , ஊரடங்கு தொடர்ந்தாலும், தொடராவிட்டாலும் நாம் வைரஸுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும்.’ என தனது கருத்தை பொதுமக்களிடம் பகிர்ந்துகொண்டார்.  

Published by
மணிகண்டன்

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

36 seconds ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

39 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago