மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தஜ்முல்ஹக் என்கிற கட்டிட தொழிலாளி கேரளாவில் கோழிக்கூடு பகுதியில் தங்கியுள்ளார். தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்.
இவர் அண்மையில் கேரள அரசின் காருண்யா பாக்யஸ்ரீ என்கிற லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசை விழுந்ததை நினைத்து எவ்வளவு சந்தோஷப்பட்டாரோ அதே அளவு பயப்படவும் செய்துள்ளார். உடனே, பதறிப்போய் காவல்நிலையம் சென்றுள்ளார்.
அங்கு தனக்கு லாட்டரியில் பரிசு விழுந்ததாகவும், அதனை பத்திரமாக வாங்கி தருமாறும், யாரும் அதனை போலி லாட்டரி என பறித்து கொள்வார்களோ என பயப்படுவதாகவும், கூறினார். இதனால், பாதுகாப்பு தருமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது பயத்தை புரிந்துகொண்ட போலீசார், அவருடன் லாட்டரி கம்பெனிக்கு சென்று, பரிசுத்தொகையை வாங்கி, அதனை தஜ்முல்ஹக் பேரில் வங்கியில் டெபாசிட் செய்து கொடுத்துள்ளனர். இதற்காக போலீசாருக்கு தஜ்முல்ஹக் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…