Hamas attack kerla women [File Image]
இஸ்ரேலில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர், இந்தியாவில் வசிக்கும் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி கொண்டு இருக்கும்பொழுது, பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூரைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த், ஏழு ஆண்டுகளாக இஸ்ரேலில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஷீஜாவின் கணவரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் இந்தியாவில் உள்ளனர், கணவர் புனேவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஷீஜா ஆனந்தின் கணவர் நலம் விசாரிக்க வீடியோ கால் செய்திருக்கிறார். அப்பொழுது, பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே பலத்த சத்தம் கேட்டதுடன் ஷீஜாவின் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பின்னர், கேரளாவைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவர் ஷீஜாவின் குடும்பத்தினருக்கு அவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். ஷீஜா ஆனந்துக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. தற்பொழுது, இஸ்ரேலில் இருக்கும் இந்தியத் தூதரக குழுவினர் ஷீஜாவின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு அவர் நலமுடன் இருப்பதாக ஆறுதல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் பணிபுரிந்து வருகிறார்கள். இதில், கொச்சியைச் சேர்ந்த 45 பேர் பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இப்பொது பாதுகாப்பாக இருப்பதாகவும், எல்லையை கடக்க அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…