லட்சத்தீவு பிரச்சனை குறித்து உயிரியல் ஆயுதம் என்ற கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவை சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. இவர் பல மலையாள படங்களின் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். திரைப்பட இயக்குநர், மாடல் மற்றும் நடிகையாக விளங்கும் ஆயிஷா சுல்தானா மலையாள தொலைக்காட்சி விவாதத்தில், லட்ச தீவில் கொரோனாவை உயிரியல் ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது என்ற கருத்தை தெரிவித்தார்.
இவர் கூறியிருப்பது அரசுக்கு எதிரான செயல் என்று அங்குள்ள பாஜகவினர் ஆயிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா மீது புகார் அளித்துள்ளார். ஆனால் ஆயிஷா மீது வழக்கு பதியவில்லை. இதன் காரணத்தால் பாஜகவினர் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அங்கு போராட்டம் நடத்தினர்.
பின்னர் லட்சத்தீவு போலீசார் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக குற்றம், வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…