Delhi Metro [Image Source : Reuters]
ரயில்களில் பயணிகள் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளத, போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, துவாரகா செக்டார் 21 மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் ப்ளூ லைனில் பயணித்த மெட்ரோவில் மதுவை எடுத்துச் செல்ல முடியுமா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டிஎம்ஆர்சி, ” ஒரு நபருக்கு டெல்லி மெட்ரோவில் 2 சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அனுமதிக்கப்படுகின்றன” என்று ரிப்லே செய்துள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…