ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் கூடுதல் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா அமைச்சர் கேடிஆரிடம் புகார்,பதில் ட்வீட் செய்த அமைச்சர்!
கொரோனா ஒரு புறம் வாட்டி வதைக்கும் நிலையில் தெலுங்கானாவால் ஒரு நபர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணியில் லெக் பீஸ் இல்லை என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே டி.ராமராவ்விடம் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
அதில் அந்த நபர் தான் Zomatto வில் பிரியாணியுடன் கூடுதல் மசாலா மற்றும் கூடுதல் லெக் பீஸ் ஆர்டர் செய்ததாகவும், அதில் இரண்டுமே இல்லை என்றும் இதுதான் மக்களுக்கு சேவை செய்யும் விதமா என்று தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் Zomatto வை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.டி.ராமராவ் இதற்கு என்னை ஏன் டேக் செய்தீர்கள் சகோதரரே என்றும், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள் என்று ட்விட்டரில் அந்த நபரின் போஸ்டரை இணைத்து பதில் ட்விட் செய்துள்ளார்.
இது சமூக வளைதளத்தில் அதிகமாக பேசப்படுவதை கவனித்த அந்த நபர் தனது அந்த பதிவை உடனேயே நீக்கியுள்ளார். ஆனால் அவர் நீக்குவதற்கு முன்னரே நெட்டிசன்களால் அந்த பதிவு வைரலாகிவிட்டது.
மேலும் தெலுங்கானா நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு ட்விட்டர் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் கே.டி.ஆரை ட்விட்டரில் டேக் செய்து உதவிகளை கேட்டு வருகின்றனர், சமீபத்தில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு முன்னால் ஒரு குழந்தை உதவியற்ற முறையில் பிச்சை எடுக்கும் புகைப்படம் சமூக வளைதளம் வழியாக கே.டி.ஆர் க்கு பகிரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கே.டி.ஆர் தனது குழுவினர் மூலம் அந்த சிறுவனுக்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…