மேகதாது அணை எங்களது உரிமை, துரோகம் செய்யும் எண்ணம் இல்லை..! டி.கே.சிவகுமார் விளக்கம்..!

Published by
செந்தில்குமார்

மேகதாது அணை திட்டத்தை தொடங்குவதற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாநிலத் துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதாவில் டி.கே.சிவக்குமார், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார். அதில் கடந்த ஆண்டு மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. ஆனால், அதனை நிறைவேற்ற எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தில் நீர்ப்பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று, நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்கவும், மேகதாது மற்றும் மகதாயி அணைத் திட்டத்தை செயல்படுத்தவும தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவில் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விளக்கம் அளித்தார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

7 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

8 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

10 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

11 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

12 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

12 hours ago